|
அளவற்ற அருளாளனும் நிகரற்ற
அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் பெயரால்
எல்லாப் புகழும் ஏக வல்லவனாகிய
அல்லாஹ் ஒருவனுக்கே! அவனுடைய அன்பும் அருளும் உலகத்தாருக்கு
அருட்கொடையாக அனுப்பப்பட்ட நம் உயிரிலும் மேலான, அல்லாஹ்வின்
தூதர் முஹம்மது(ஸல்) அவர்களின் மீதும்.
அவர்களின் குடும்பத்தார், தோழர்கள், அவர்களைப் பின் தொடர்ந்த
தாபியீன்கள். நல்லடியார்கள் அனைவர் மீதும் என்றென்றும் நிலவட்டுமாக!
அல்லாஹ் நம்மீது கடமையாக்கிய கடமைகளில் ஒன்று ரமளான்
மாதத்தின் நோன்பாகும். இம்மாதத்தில் நாம் எப்படி நடந்து கொள்ள வேண்டும்
என்பதைப் பற்றி நபி(ஸல்) அவர்கள் விளக்கமாக கூறியிருக்கின்றார்கள்.
அதன்படி நாமும் நடந்தால் இம்மாதத்தின் நலன்களைப் பெற்று
நன்மக்களாகலாம். இந்த உயரிய நோக்கோடு இச்சிறு புத்தகத்தை நான்
எழுதியுள்ளேன். ஆகவே இதைப் படித்து ரமளான்
மாதத்தின் மூலம் அல்லாஹ்வின் அருட்கொடைகளைப் பெற்றவர்களாகுங்கள்.
அல்லாஹ் நம் அனைவருக்கும் அவனின் அருளையும், பிழைப்பொறுப்பையும் தந்து,
சுவர்க்கத்தில் நுழையும் வாய்ப்பையும், நரக வேதனையிலிருந்து
பாதுகாப்பையும் தந்தருள்வானாக!
அன்புடன்,
கே.எல்.எம்.இப்ராஹீம் (மதனீ)
ஜித்தா, சவுதி
அரேபியா
|